Skip to main content

மே 17 இயக்கத்திற்கான கேள்விகள் - நேருக்கு நேராக..

இணையவழி குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் கள்ளமௌனம் காத்து வந்தது மே 17 இயக்கம். எனவே நேற்று இரவு அவர்கள் தி.நகரில் நடத்திய கூட்டத்தில் நேரில் சென்று அச்சு பிரதிகளாக எங்கள் கேள்விகளை கொடுத்து கேள்வி எழுப்பி இருக்கிறோம்.

சில மணிகளுக்கு முன்பு (16.03.2014) தி.நகரில் நடந்த மே பதினேழு இயக்கத்தின் கூட்டத்தில் நானும் தோழர் ராஜா ஸ்டாலினும் கலந்து கொண்டு அவர்கள் முன்வைக்கும் தவறான கொள்கையை சுட்டிக்காட்டும், கேள்வி எழுப்பும் விளக்க கட்டுரையை வந்திருந்தவர்களிடமும், ஒருங்கிணைப்பாளர்கள் Thirumurugan Gandhi மற்றும் Umar Chennai ஆகியோருக்கும் கையளித்தோம்.

அமெரிக்கா எனும் பூச்சாண்டியை பூதக்கண்ணாடி வைத்து பெரிது படுத்தி, அதன் மூலம் இந்தியா, சீனா, ரசியா, ஜப்பான் உட்பட உலக நாடுகளை, ஏன் சொல்லப்போனால் இலங்கை அரசை கூட இரண்டாம் கட்ட எதிரிகளாக பாவமன்னிப்பு  கொடுக்கின்றனர். இதன் மூலம் உண்மையான் எதிரிகளை தப்ப வைத்து இரண்டாம் எதிரியான அமெரிக்காவை முதல் எதிரியாக காட்டும் மடைமாற்று வேலையை செய்கின்றனர்.

அமெரிக்கா அயோக்கியன் என்ற போதும், அவனை விட ஈழ துரோகத்தில் முந்தி நிற்கும் இந்தியா, சீனா, ரசியா, கியூபா போன்ற நாடுகளை கேள்வி கேட்காமல் அமெரிக்காவை மட்டுமே முன்னிறுத்தும் மர்மத்தை அவர்கள் இப்போதேனும் விளக்க வேண்டும்.

50,000 கோடிக்கு ரயில் பாதை அமைத்து கொடுக்கும் இந்தியா உத்தமனான கதையை நாம் அறிந்தே ஆகவேண்டும்.

"உயிரை கொடுத்தேனும் இலங்கையை காப்பேன்" என்று சபதம் இடும் கம்யூனிச நாடுகள், இஸ்லாமிய நாடுகள் "நல்லவன்" பட்டியலில் இணைந்த அதிசயத்தை இவர்களே விளக்க வேண்டும்.

மீண்டும் மீண்டும் அமெரிக்காவே முதன்மை துரோகி என்கிற அரைவேக்காட்டு அரசியல் நிலைப்பாட்டை கைவிட வேண்டும்.

இந்தியாவே முதல் எதிரி, இந்தியாவை நோக்கியே நமது முதல் கவனம் இருக்க வேண்டும் என்கிற நியாயமான அரசியல் நிலைப்பாட்டுக்கு அவர்கள் வரும் வரை எங்கள் கேள்விகள் ஓயாது.

பார்க்கவில்லை,தெரியாது என்றெல்லாம் இந்த முறை பதில் சொல்ல முடியாது. நாங்கள் இருவரும் நேரில் சென்று அனைவரின் கண் முன்னாலே கேள்விகளை அச்சுபிரதியாக கொடுத்திருக்கிறோம். இதற்கும் அவர்கள் பதில் சொல்லவில்லை என்றால் சனநாயக கடமைகள் பற்றி பேசவோ, கருத்துரிமை பற்றி பேசவோ, கள்ளமௌனம் காக்கும் உலக நாடுகளை, இந்தியாவை கேள்வி கேட்கும் தகுதி அவர்களுக்கு இல்லை.

பார்க்கலாம் இந்த முறையேனும் பதில் வருகிறதா என்று.. நாங்கள் கொடுத்த விளக்கம் மற்றும் கேள்விகள் அடங்கிய  கட்டுரை இங்கே உங்கள் பார்வைக்கு..

http://eelamfight.blogspot.com/2014/03/blog-post_16.html

Comments

Popular posts from this blog

ஐநா தீர்மானம் - அமளிக்கு இடையில் வாக்கெடுப்பு

நேற்று (27-மார்ச்-2014) அன்று ஐநாவின் மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த பதிவில் தீர்மான நாளில் நடந்த அமளிகள் குறித்து பதியப்பட்டுள்ளது. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த மனித  உரிமை மீறல், போர் குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்நாட்டு விசாரணை முறைகள் தோல்வி அடைந்துவிட்டன என்றும், எனவே இலங்கையில் நடந்த குற்றங்கள் மீது ஒரு பன்னாட்டு விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. காண்க:  http://www.un.org/ga/search/view_doc.asp?symbol=A/HRC/25/L.1/Rev.1 இது நிறைவேறிய விதம் குறித்த பதிவு இது. முதலில் தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமெரிக்கா, பிரான்சு, மசிடோனியா, மொரீசியஸ் ஆகிய நாடுகள் அதற்கான நியாயங்களை விளக்கின. ஆனால் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவிடாமல் பாகிஸ்தான், சைனா போன்ற இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் சண்டித்தனம் செய்தனர். சீனா இந்த தீர்மானம்  இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று வாதிட்டது. இந்த தீர்மான நிகழ்வுகளின் போது சீனா, ரசியா, கியூ...

செவ்வாய் கிரக முற்றுகை போராட்டம்

ஈழ விடுதலைக்கு தடை போடும் நாடுகளின் பட்டியல் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் தர வரிசை மாறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஜப்பான் என்று நீளும் எதிரிகள் பட்டியல் தனி நபர்களின் வசதிக்கு தங்குந்தாற்போல் விஷத்தன்மைக்கான தர வரிசை மாற்றி கட்டமைக்கப்படுகிறது. இந்த தரப்படுத்தல் முறையானது தனி நபர் விருப்பம், அரசியல் கொள்கைகள், முட்டு கொடுக்கும் அமைப்புகளின் விருப்பம், காசு கொடுக்கும் கட்சிகளின் கொள்கை மற்றும் சா-பூ-த்ரீ போன்ற இதர அறிவியல் பூர்வமான முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த நேயர் விருப்ப பட்டியலை நியாயப்படுத்த தங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்கின்றனர். மேற்குறிப்பிட்ட அனைவருமே துரோகிகள் என்பதால் கருத்து பரப்பல் செய்ய எல்லா தரப்பினருக்குமே போதுமான தரவுகள், தகவல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இந்த தரப்படுத்தலில் மிக நுட்பமாக காப்பாற்றப்படும் நாடு இந்தியா தான். தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் இந்திய குடிமக்களாக இருப்பதனால் அவர்களின் தாய்நாட்டு பாசம் மெச்சத்தக்கதே என்றாலும், அதற்கு பின்னாலுள்ள அரசியலை நாம் சற்ற...

இலங்கையின் இனப்படுகொலையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு கோரி - கருத்தரங்கம்

இலங்கையின் இனப்படுகொலை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த கோரி கருத்தரங்கம் நாள்: 02 மார்ச் , 2013 , மாலை 4.00 மணி இடம்: செ.தெ.நாயகம் பள்ளி, தி.நகர் இன்று நடந்த இந்த கருத்தரங்கில் கீழ்கண்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர். 1.        T.S.S மணி, மனித உரிமை போராளி 2.        இரா. அருள், பசுமை தாயகம், மாநில அமைப்பாளர் 3.        மருத்துவர். வேலாயுதம், சமூக முன்னேற்ற சங்கம், மாநில தலைவர் 4.        நாகராஜன், Global Tamil Organization 5.        செல்வ பாண்டியன், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்     மேலும் பலர்  கீழ்கண்ட கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன: T.S.S. மணி : ·         இனப்படுகொலையா அல்லது போர் குற்றமா என்று தமிழர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. போர்குற்ற புலனாய்வு ஈழ விடுதலையை தடுக்கும் என்றெல்லாம் சொல்...