பொலீவியா தனது அதிஉயர் மனிதநேய, சனநாயக விருதை இனப்படுகொலையாளி ராஜபக்சேவுக்கு வழங்கி இருப்பதை இப்போது தமிழர்கள் பரவலாக எதிர்ப்பதும், கவலை தெரிவிப்பதும் காண முடிகிறது. பொலீவியாவின் செயலை எதிர்ப்பதும், புறக்கணிப்பதுமே சரியான எதிர்வினையாக இருக்கும் என்ற போதிலும், இன்றைய சூழ்நிலையில் அதை தாண்டிய நான்கு முக்கியமான வேலைகள் நம் கண்முன் நிற்கின்றன. 1. புலிகளின் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையினை ஆராய்ந்து, அதை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றும் முறைகளை நாம் ஆராய வேண்டும். புலிகளின் மீதான தடை நீக்கப்பெருதல் அனைத்திலும் முதன்மையான தேவை ஆகும். உலகெங்கிலும் விரைந்து செயல்பட முடியாமல் தேங்கி நிற்கும் பல உண்மை உணர்வாளர்களுக்கு கட்டுடைத்ததை போல ஆகும். ஐநா விசாரணை தொடங்க உள்ள இந்த நிலையில், மேலும் பலர் துணிவுடன் சாட்சிகளாக முன்வருவார்கள். இல்லாத போது இந்தியாவில் வசிப்பவர்கள் இந்திய சட்டப்படியான தடையை கருதி தயங்க கூடும். 2. வடக்கிலும் – கிழக்கிலும் ராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த நிலங்களின் மீதே / இ
நேற்று (27-மார்ச்-2014) அன்று ஐநாவின் மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த பதிவில் தீர்மான நாளில் நடந்த அமளிகள் குறித்து பதியப்பட்டுள்ளது. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல், போர் குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்நாட்டு விசாரணை முறைகள் தோல்வி அடைந்துவிட்டன என்றும், எனவே இலங்கையில் நடந்த குற்றங்கள் மீது ஒரு பன்னாட்டு விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. காண்க: http://www.un.org/ga/search/view_doc.asp?symbol=A/HRC/25/L.1/Rev.1 இது நிறைவேறிய விதம் குறித்த பதிவு இது. முதலில் தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமெரிக்கா, பிரான்சு, மசிடோனியா, மொரீசியஸ் ஆகிய நாடுகள் அதற்கான நியாயங்களை விளக்கின. ஆனால் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவிடாமல் பாகிஸ்தான், சைனா போன்ற இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் சண்டித்தனம் செய்தனர். சீனா இந்த தீர்மானம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று வாதிட்டது. இந்த தீர்மான நிகழ்வுகளின் போது சீனா, ரசியா, கியூபா, வியட்நாம்